பாஸ்கா காலம் 6-ஆம் வாரம் மே 8 புதன் முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 17:15, 22-18:1 நற்செய்தி வாசகம்: யோவான் 16:12-15 இன்றைய நற்செய்தி முழு உண்மையை நோக்கி வழிநடத்தும் தூய ஆவியாரை பற்றியது. மூவொரு கடவுளின் மூன்றாம் ஆளான தூய ஆவியார் இறைவாக்கினர் வழியாக பேசிய தூய ஆவியார் கடவுளின் ஆற்றலும் உயிரளிப்பவருமான தூய ஆவியார் இயேசுவின் துணையாளராவார். தூய ஆவியாரின் துணை இன்றி இறைவனின் வெளிப்பாடுகளை புரிவதும், வாழ்வதும் எளிதாகாது. சோதனை காலங்களில் விசுவாச தளர்ச்சி ஏற்படும் போது இருளான நாட்களை ஒளியான நாட்களாக மாற்றுபவர் தூய ஆவியார். வாழ்வில் தொடர் தோல்விகளும், துன்பங்களும் வரும் போது துணை நிற்பவர் அவர். பலவகையான உண்மைகளை தேடும் ஒவ்வொருவருக்கும், குறிப்பாக புதிய மருந்தை கண்டுபிடிக்க விரும்பும் விஞ்ஞானிக்கும், சிறந்த ஆற்றலின் மூலத்தைத் தேடுபவருக்கும், மனித மனத்தின் ஆழத்தை அறிய விரும்பும் உளவியலாளருக்கும் இசைஞானிக்கும் கலைஞருக்கும் கதாசிரியருக்கும் படைப்பாற்றலோடு கூடிய உண்மையை வெளிப்படுத்துபவர் தூய ஆவியாரே. வாழ்வின் இக்கட்டான தருணங்களில் எந்த பாதையை தேர்ந்து க...
ஆண்டவருடைய விண்ணேற்றம் மே 12 ஞாயிறு முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 1:1-11 இரண்டாம் வாசகம்: எபேசியர் 4: 1- 13 நற்செய்தி வாசகம்: மாற்கு 16: 15- 20 நற்செய்தியை வாழ்வோம் இறை இயேசுவில் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே தாய்த் திருச்சபையானது இன்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றது. இயேசுவின் விண்ணேற்றம் மனிதரால் புரிந்து கொள்ள முடியாத ஒரு புதிர். தெரிந்து கொள்ள முடியாத ஒரு நிகழ்வு. இப்பெறுவிழா நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடம் ஒன்று. விண்ணகமே நம் தாய் நாடு(பிலிப் 3:20) இரண்டாவது கருத்து நீங்கள் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். மூன்றாவது நீங்கள் என் சாட்சிகள். மூன்று பேர் குருவிடம் வந்தார்கள். சாமி என் தந்தை இறந்துவிட்டார் அவர் ஞாபகச் சின்னமாக என்றும் நினைவில் இருக்கின்ற வகையிலே நான் ஏதாவது செய்ய ஆசைப்படுகின்றேன் என்று சொன்னார்கள். அவர் ஒவ்வொருவராக கேட்டார். மூத்த மகன் சொன்னான் அழகிய மணிமண்டபம் கட்டி பளிங்குக் கல்லாலே செதுக்கி நான் அழகுபடுத்...
கடவுளின் மனமாற்றம் ஆண்டவரே இரக்கமாயிரும் என்று அன்றாட திருப்பலியில் நாம் ஜெபிக்கிறோம், இந்த தவக்காலம் என்பது அருளின் காலமாக, இரக்கத்தின் காலமாக, மன்னிப்பின் காலமாக, மனமாற்றத்தின் காலமாக, இருக்கின்றது. இந்த தவக்காலத்தில் நாம் உன்னதங்களிலே பாடுவதில்லை தங்க உடை அணிவதில்லை ஆடம்பரங்கள் இருப்பதில்லை ஆடம்பர கொண்டாட்டங்கள் இருக்காது ஆனால் முழு மன மகிழ்ச்சி கிடைக்கும் இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்பதை இன்றைய வாசகங்கள் எடுத்துக் கூறுகிறது. அதாவது இன்றைய முதல் வாசகத்தில் (யோவேல் 2:12-18) அழுது புலம்பி ஆண்டவரிடம் திரும்பி வர அழைப்பு விடுக்கின்றது. இன்றைய (மத் 6:1-6, 16 - 18) நற்செய்தியில் நோன்பு இருக்கும்போது முக வாட்டத்தோடு இருக்க வேண்டாம் என்று இயேசு தனது சீடர்களுக்கு கூறுகின்றார். ஆக நாம் எப்பொழுது மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதை நம்முடைய செயல்கள் முடிவு செய்கின்றது. ஆண்டவரிடம் நாம் மனம் திரும்பி வந்து அவரிடம் சரணடைகின்ற பொழுது அவருடைய அளவற்ற இரக்கத்தையும் அளவற்ற மன்னிப்பையும் நாம் பெறுகின்ற பொழுது அந்த இரக்கத்தை குறித்து நாம் அழுது புலம்ப வேண்டாம், அதைக் குறித்து நாம் மகிழ்ச்சி ...
Comments
Post a Comment