† இன்றைய புனிதர் †

(ஆகஸ்ட் 30)



✠ புனிதர் நர்ஸிசா டி ஜீசஸ் ✠

(St. Narcisa de Jesús)


பொதுநிலைப் பெண்மணி:

(Laywoman)


பிறப்பு: அக்டோபர் 29, 1832

நோபோல், குவாயஸ், ஈகுவேடார்

(Nobol, Guayas, Ecuador)


இறப்பு: டிசம்பர் 8, 1869 (வயது 37)

லிமா, பெரு

(Lima, Peru)


ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)


முக்திபேறு பட்டம்: அக்டோபர் 25, 1992

திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்

(Pope John Paul II)


புனிதர் பட்டம்: அக்டோபர் 12, 2008

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்

(Pope Benedict XVI)


முக்கிய திருத்தலம்:

சேன்ச்சுவரியோ டி தூய நர்ஸிசா டி ஜீசஸ் மார்டில்லோ மோரன், ஈகுவேடார்

(Santuario de Santa Narcisa de Jesus Martillo Morán, Ecuador)


நினைவுத் திருநாள்: ஆகஸ்ட் 30


புனிதர் நர்ஸிசா டி ஜீசஸ் மார்டில்லோ மோரன் (Saint Narcisa de Jesús Martillo Morán), தென் அமெரிக்காவிலுள்ள (South America) “ஈகுவேடார்” (Ecuador) நாட்டைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஒரு பொதுநிலைப் பெண்மணியாவார். இயேசு கிறிஸ்துவின்பால் தாம் கொண்டிருந்த கடுமையான பக்தி மற்றும் தர்மசிந்தை காரணமாக இவர் அறியப்படுகிறார். ஏறத்தாழ ஒரு துறவியைப் போல ஒதுங்கி வாழ்ந்த இவர், இயேசுவின் விருப்பம் அறிந்து தம்மையே அர்ப்பணித்து வாழ்ந்தார்.


அவருடைய பெற்றோரின் மரணம், தையல்காரராக வேலை செய்வதற்காக அவரை இடமாற்றம் செய்யத் தூண்டியது. அதே நேரத்தில் தமது உடன்பிறந்த சகோதரர்களின் தேவைகளுக்காகவும், ஒரு மறைக்கல்வி போதிப்பவராகவும், ஒரு கல்வியாளராகவும் அவரது பணிகளை இரட்டிப்பாகியது. ஆனால் கடவுள் மீதான அவருடைய பக்தி வலுவானது. அது, "பெரு" (Peru) நகரில் உள்ள டொமினிகன் சபை துறவியரிடையே வாழ வழிவகுத்தது. அங்கு அவர் இறப்பதற்கு முன்பு தமது இறுதி காலத்தை அங்கேதான் செலவிட்டார்.


நர்ஸிசா, "ஈக்வடார்" (Ecuador) நாட்டிலுள்ள "நோபோல்" (Nobol) நகரில் அருகேயுள்ள "சான் ஜோஸ்" (San José) என்ற சிறிய கிராமத்தில், நில உரிமையாளர்களான "பெட்ரோ மார்டிலோ" (Pedro Martillo) மற்றும் "ஜோசஃபினா மோரன்" (Josefina Morán) ஆகிய பெற்றோருக்கு பிறந்த ஒன்பது குழந்தைகளில் ஆறாவது குழந்தையாக, கி.பி. 1832ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 29ம் நாளன்று, பிறந்தார். புனிதர் "மரியானா டி ஜீசஸ்" (St. Mariana of Jesus de Paredes) மற்றும் "போலந்தின் புனிதர் ஹ்யாசிந்த்" (Hyacinth of Poland) ஆகியோர் மீது பக்தி கொண்டிருந்த இவரது தந்தை கடுமையாக உழைத்து, கணிசமான செல்வத்தை குவித்து வைத்திருந்தார்.


கி.பி. 1838ம் ஆண்டு, இவரது ஆறு வயதில், இவரது தாயார் இறந்தார். இதன் விளைவாக வீட்டு வேலைகளை அவர் மேற்கொண்டார். அதே நேரத்தில், இவரது ஒரு மூத்த சகோதரியும், ஆசிரியை ஒருவரும், இவருக்கு எழுத படிக்கவும், கிதார் வாசிக்கவும், பயன்படுத்தவும் கற்றுக் கொடுத்தனர். அவர், தையல் மற்றும் சமையல் வேலைகளையும் கற்றுக்கொண்டார். சிறுமி நர்ஸிசா, தனது வீட்டில் இருந்த ஒரு சிறிய அறையை வீட்டு சிற்றாலயமாக மாற்றினார். அவர், கி.பி. 1839ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 16ம் நாளன்று, தனது உறுதிப்பூசுதல் அருட்சாதனம் பெற்றார்.


மார்ட்டிலோ தனது வீட்டிற்கு அருகில் ஒரு சிறிய வனத்தில், தனிமையில் தியானம் செய்ய அடிக்கடி சென்றார். அவர் சென்ற இடத்தினருகேயிருந்த கொய்யா மரம் இருந்த ஒரு இடம், இப்போது ஒரு பெரிய திருயாத்திரை இடமாக உள்ளது. புனிதர் "மரியானா டி ஜீசஸ்" (St. Mariana of Jesus de Paredes) என்பவரை தமது பாதுகாவல் புனிதராக தெரிந்துகொண்ட இவர், தனது சொந்த வாழ்க்கையில் அவரை பின்பற்ற முயன்றார். அமைதியான, மற்றும் தாராள மனப்பான்மையுடனும், இனிமையாகவும், சிந்தனையுடனும் அறியப்பட்ட மார்ட்டிலோ, தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு கீழ்ப்படிந்த பெண்ணாகவும் வாழ்ந்தார். அவருடைய கிராமத்தில் அவர் நன்கு அறியப்பட்ட அவர், அங்குள்ளோரால் நேசிக்கப்பட்டார். நல்ல உயரமான அவர், பிரகாசமான நீல நிற கண்களைக் கொண்டிருந்த மார்ட்டிலோ, பொன்னிறமாக இருந்தார். மேலும் வலிமையாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தார்.


கி.பி. 1852ம் ஆண்டு, ஜனவரி மாதம், நிகழ்ந்த அவரது தந்தையின் மரணம், குயாகுவில்" (Guayaquil) நகருக்கு இவரை இடம் பெயரத் தூண்டியது. அங்கு அவர் முக்கிய பிரபுக்களுடன் வசித்து வந்தார். ஏழைகளுக்கும் நோயுற்றவர்களுக்கும் உதவுவதும், கைவிடப்பட்ட குழந்தைகளைப் பராமரிப்பதுமாக, தனது பணிகளைத் தொடங்கினார். தமது சமூக சேவை பணிகளுக்கான செலவினங்களுக்காகவும், தனது எட்டு சகோதர சகோதரிகளுக்கு ஆதரவளிப்பதற்காகவும் அவர் தையல் பணியை தேர்ந்தெடுத்தார்.


ஆனால் அவர் விரைவில் சில மாதங்களுக்கு "குயெங்கா" (Cuenca) நகருக்கு சென்றார். அங்கு அவர் வீடு வீடாகச் சென்று - மறைப்பணியாளர் "அருளாளர் மெர்சிடிஸ் டி ஜீசஸ் மோலினா" (Mercedes de Jesús Molina) உட்பட - அவரை அழைத்துச் செல்லும் எவருடனும் வசித்து வந்தார், அமைதியான சிந்தனைகளுக்கும் தவத்திற்கும் அதிக நேரம் செலவிட்டார்.


கி.பி. 1865ம் ஆண்டில் நோயுற்ற அவரது ஆன்மீக வழிகாட்டி, 1868ம் ஆண்டு, இறந்தார். அந்த நேரத்தில் உள்ளூர் ஆயர், இவரை கார்மலைட்டுகளுடன் வாழ அழைத்தார். ஆனால், இவர், இந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். கி.பி. 1868ம் ஆண்டு, ஜூன் மாதம், தனது புதிய ஃபிரான்சிஸ்கன் ஆன்மீக வழிகாட்டி "பெட்ரோ குவால்" (Pedro Gual) என்பவரது ஆலோசனையின் பேரில், பெரு (Peru) நாட்டிலுள்ள லிமா (Lima) நகருக்கு இடம் பெயர்ந்தார். அங்கு அவர், தாம் ஒரு கன்னியாஸ்திரி இல்லை எனினும், "பேட்ரோசினியோ" (Patrocinio) நகரிலுள்ள டொமினிகன் கான்வென்ட்டில் தங்கி வசித்து வந்தார். அங்கே அவர், தினமும் தொடர்ந்து எட்டுமணி நேரம் அமைதியான மற்றும் தலைமையிலான தியானங்களில் ஈடுபட்டார். கூடுதலாக, அவர் தினமும் இரவின் நான்கு மணிநேரங்களை, முள் கிரீடம் அணிவது, மற்றும் பல்வேறு வகையான தம்மைத்தாமே வருத்திக்கொள்ளும் செயல்களில் அர்ப்பணித்தார். தமது உணவைப் பொறுத்தவரை, அவர் ரொட்டி மற்றும் தண்ணீர் மட்டுமே உட்கொண்டு, உண்ணாவிரதம் இருந்தார். நற்கருணை மட்டுமே தமது முழு உணவாக எடுத்துக் கொண்டார். அதே நேரத்தில் அவர் சில சமயங்களில் பரவச நிலையிலும் காணப்பட்டார்.


கி.பி. 1869ம் ஆண்டு, செப்டம்பர் மாதத்தின் பிற்பகுதியில், அவருக்கு அதிக காய்ச்சல் ஏற்பட்டது. அதற்கான மருத்துவ சிகிச்சைகள் பெரிதாக ஒன்றும் பலனளிக்கவில்லை. இதன் விளைவாக, கி.பி. 1869ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 8ம் தேதி, நள்ளிரவுக்கு முன்பு அவர் இறைவனில் மரித்தார். அவரது மரணத்தின்போது, மார்ட்டிலோ இருந்த அறையில், ஒரு பரவசமான மற்றும் இனிமையான வாசனை நிரம்பியிருந்ததாக ஒரு கன்னியாஸ்திரி அறிவித்தார். முதலாவது வத்திக்கான் சபை (First Vatican Council) திறக்கப்பட்ட காலத்தில் அவர் இறந்தார்.


1998ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 22ம் நாளன்று, அவரது திருஉடலின் மிச்சங்கள் பாதுகாக்கப்படும் "நோபோல்" (Nobo) நகரில் அவரது பெயரில் ஒரு திருத்தலம் அர்ப்பணிக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

ஆண்டவருடைய விண்ணேற்றம் மே 12 ஞாயிறு