பாஸ்கா காலம் 6-ஆம் வாரம்

 மே 8 புதன்


 முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 17:15, 22-18:1


 நற்செய்தி வாசகம்: யோவான் 16:12-15


 இன்றைய நற்செய்தி முழு உண்மையை நோக்கி வழிநடத்தும் தூய ஆவியாரை பற்றியது.

 மூவொரு கடவுளின் மூன்றாம் ஆளான தூய ஆவியார் இறைவாக்கினர் வழியாக பேசிய தூய ஆவியார் கடவுளின் ஆற்றலும் உயிரளிப்பவருமான தூய ஆவியார் இயேசுவின் துணையாளராவார். தூய ஆவியாரின் துணை இன்றி இறைவனின் 

வெளிப்பாடுகளை புரிவதும், வாழ்வதும் எளிதாகாது. சோதனை காலங்களில் விசுவாச தளர்ச்சி ஏற்படும் போது இருளான நாட்களை ஒளியான நாட்களாக மாற்றுபவர் தூய ஆவியார். வாழ்வில் தொடர் தோல்விகளும், துன்பங்களும் வரும் போது துணை நிற்பவர் அவர். பலவகையான உண்மைகளை தேடும் ஒவ்வொருவருக்கும், குறிப்பாக புதிய மருந்தை கண்டுபிடிக்க விரும்பும் விஞ்ஞானிக்கும், சிறந்த ஆற்றலின் மூலத்தைத் தேடுபவருக்கும், மனித மனத்தின் ஆழத்தை அறிய விரும்பும் உளவியலாளருக்கும் இசைஞானிக்கும் கலைஞருக்கும் கதாசிரியருக்கும் படைப்பாற்றலோடு கூடிய உண்மையை வெளிப்படுத்துபவர் தூய ஆவியாரே.

வாழ்வின் இக்கட்டான தருணங்களில் எந்த பாதையை தேர்ந்து கொள்வது எனக்குழம்பி நிற்கும்போது நமக்கு வழியாக, துணையாக நிற்பவரும் தூய ஆவியானவரே. எனவே நமது கற்பனைக்கெட்டாத வரம்புகளற்ற விதத்தில் செயலாற்றும் வல்லமை படைத்தவர் தூய ஆவியார் என்பதை அறிவோம். தூய ஆவியாரால் புதுமை அடைவோம். தூய ஆவியாரின் வழி இயேசுவின் பிரசன்னம் பூவுலகில் தொடர்கிறது. இயேசுவின் பிரசன்னத்தில் வாழ்வோம் அவர்தரும் மகிழ்வில் பங்கு கொள்வோம். 


                            

Comments

Popular posts from this blog

ஆண்டவருடைய விண்ணேற்றம் மே 12 ஞாயிறு