Posts

Showing posts from September, 2023

அக்டோபர் 1, 2023. பொதுக்காலம் 26ஆம் வாரம் – ஞாயிறு. லிசியேக்ஸ் நகரின் புனிதர் தெரேசா.

Image
அக்டோபர் 1, 2023. பொதுக்காலம் 26ஆம் வாரம் – ஞாயிறு. லிசியேக்ஸ் நகரின் புனிதர் தெரேசா. அன்பினால் ஆறுதலும், தூய ஆவியினால் தோழமையும் பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டுள்ளீர்களா? பிலிப்பியர் 2: 1 பல ஆயிரம் மைல்கள் நடந்து, பல லட்சம் பேரை கிறிஸ்தவர்களாக மாற்றியவரே, புனித சவேரியார். இவர் செய்த நற்செய்தி பணியை, இவரை போல முழு ஈடுபாட்டோடு யாரும் செய்வது அரிது. இவரை மறைபரப்பு நாடுகளின் பாதுகாவலர் என்று திருஅவை அழைத்தது. இந்தப் புனிதருக்கு இணையாக, மறைபரப்பு நாடுகளின் பாதுகாவலராக, வெறும் நான்கு சுவர்களுக்கு நடுவில் இருந்து உயர்ந்தவரே, லிசியேக்ஸ் நகரின் புனிதர் தெரேசா. 14 வயதில் கன்னியர் மடத்தில் சேர விரும்பும் ஒரு சிறுமி, தான் நினைத்ததை செய்து முடிக்கிறார். 25 ஆவது வயதை அடைவதற்கு முன்பே இறைவனடி சேர்ந்தார். இவர் ஒரு சிறுமியாக இருந்தாலும் கூட அவர் செய்த செயல்களை மிகப்பெரியவர்களால் செய்வது கடினம். யார் அந்த சிறுமி? அந்த சிறுமி செய்த சாதனைகள் தான் என்ன? என்ற கேள்வி நம்மில் பலருக்கு எலலாம். அன்பினால் ஆறுதலும், தூய ஆவியினால் தோழமையும் பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டவரே, லிசியேக்ஸ் நகரின் புனிதர் தெரேசா. புனிதர்

(அக்டோபர் 1) ✠ லிசியேக்ஸ் நகரின் புனிதர் தெரேசா ✠( St. Thérèse of Lisieux)

Image
(அக்டோபர் 1) ✠ லிசியேக்ஸ் நகரின் புனிதர் தெரேசா ✠( St. Thérèse of Lisieux) கன்னியர் /மறைவல்லுநர்: (Virgin/ Doctor of the Church ) பிறப்பு: ஜனவரி 2, 1873 அலேன்கான், ஒர்ன், ஃபிரான்ஸ் (Alençon, Orne, France) இறப்பு: செப்டம்பர் 30, 1897 (வயது 24) லிசியே, கல்வடாஸ், ஃபிரான்ஸ் (Lisieux, Calvados, France) ஏற்கும் சமயம்: ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) முக்திபேறு பட்டம்: ஏப்ரல் 29, 1923 திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் (Pope Pius XI) புனிதர் பட்டம்: மே 17, 1925 திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் (Pope Pius XI) முக்கிய திருத்தலங்கள்:  தூய தெரேசா பேராலயம், லிசியே நகர், ஃபிரான்ஸ் (Basilica of St. Thérèse in Lisieux, France) நினைவுத் திருவிழா: அக்டோபர் 1 சித்தரிக்கப்படும் வகை: கர்மலைட் துறவியர் சீருடைகள் (Carmelite habit), சிலுவையில் அறையப்பட்ட இயேசு (Crucifix), ரோஜாக்கள் (Roses) பாதுகாவல்:  வாட்டிகன் நகர தோட்டங்கள், மறைப்பணியாளர்கள்; ஃபிரான்ஸ்; ரஷியா; எய்ட்ஸ் நோயாளிகள்; தோட்டக்கலைஞர்; பெற்றோரை இழந்தோர்; காச நோயாளிகள் குறிப்பிடத்தகுந்த படைப்புகள்:  ஓர் ஆன்மாவின் வரலாறு (The Story of a Soul
 பொதுக்காலம் 25 வது ஞாயிறு நீதியும் இரக்கமும் உள்ள தலைவர். இன்றைய வாசகங்கள் அனைத்தும் ஆண்டவரின் பண்பு நலன்களையும், அவரது இயல்பைப் பற்றியும் எடுத்துரைப்பதாக உள்ளது. இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவரைத் தேட வேண்டும் என்பதை, இறைவாக்கினர் ஏசாயா வழியாக இறைவன் தரும் செய்தியாக உள்ளது. இரண்டாம் வாசகத்திலும் கூட புனித பவுல் நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே என்று ஆண்டவரை நோக்கி தான் செல்வதில் மகிழ்ச்சி அடைவதை, தனது வார்த்தைகளால் வெளிப்படுத்துகிறார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு விண்ணக தந்தையின் இயல்பை ஒரு உவமை வழியாக வெளிப்படுத்துகிறார். கடைசியானோர் முதன்மையாக முதன்மையானோர் கடைசியாக, என்ற வார்த்தையோடு நிறைவாகும் இன்றைய நற்செய்தி. இறையாட்சிக்கு உட்பட்ட அனைவருமே இறைவனின் பார்வையில் சமம் என்பதையும், அதில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் முதன்மையானோர் கடைசியானோர் என்ற வேறுபாடு இல்லை என்பதையும் அழகாக இன்று நமக்கு கற்றுத் தருகிறது. ஆனால் நாம் வாழும் இந்த உலகத்தில் மட்டும் ஏன் இத்தனை வேறு பாடுகள். செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே உள்ள பாகுபாடு, படித்தவர் படிக்காதவர் இடையே உள்ள பாகுபாடு, முதலாளி தொழிலாளி
 பொதுக்காலம் 24ம் ஞாயிறு 17/09/2023 மன்னிப்பு இரத்தத்தில் கலக்க வேண்டும் நீரில் மூழ்கி இறக்கப் போகும் தேளை காப்பாற்றிய முனிவரை கடித்தது தேள், சீடர் கேட்டார் தேள் கொட்டுகிறது அதை அப்படியே விட்டு விடுங்கள் என்று, அந்த முனிவர் சொன்னார் கொட்டுவது தேளின் இயல்பு, காப்பாற்றுவது எனது இயல்பு. நாம் அன்றாட சொல்லும் ஆண்டவர் இயேசு கற்றுக் கொடுத்த ஜெபத்தில், ஒரு பகுதி பின்வருமாறு; எங்களுக்கு எதிராக குற்றம் செய்பவரே நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். உளவியலில் கூறும் 21 நாட்கள் பழக்கமானாலும் சரி, பேதுரு கூறும் முழுமையாகி ஏழு முறை மன்னிப்பானாலும் சரி, காட்டும் பாதை ஒன்றுதான், நாம் பிறரை முழு மனதுடன் மன்னிக்க வேண்டும். அன்னை தெரசா அருமையாக கூறியிருந்தார், "பிறரை குற்றம் காணத் தொடங்கினால் எனக்கு அவர்களை அன்பு செய்ய நேரமே இருக்காது" விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளில், மிக முக்கிய வேறுபாடானது, மனிதர்களால் பிறரை மன்னிக்க முடியும். மனிதனிடத்தில் கடவுள் கொடுத்த இன்றியமையாத ஒரு பண்புதான் இந்த மன்னிப்பு.  பூ வில் சிறந்த பூ மரப்பு, மன்னிப்பு, சிரிப்பு. இரண்டு உ
 ( செப்டம்பர் 16 ) புனிதர்கள் கொர்னேலியுஸ்,சிப்ரியான் மூன்றில் ஒரு பகுதியினராக இருந்த கிறிஸ்தவர்களை அழிப்பதற்கென ஆணை பிறப்பித்த அரசர் தீசீயுஸ் (249-251) ஏழாம் மறைக்கலகத்தை தொடங்கி வைத்தான். கிறிஸ்தவர்கள் என சந்தேக வலைக்குள் சிக்கியவர்கள் தலைமை அதிகாரியிடம் சென்று சிலைகளுக்கு வணக்கம் செலுத்தி தாங்கள் கிறிஸ்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க வேண்டும். அவ்வாறு செய்யாதவர்கள் நாடுகடத்தப்படுவார்கள் என அரச சாசனத்தில் குறிப்பிட்டான். கிறிஸ்தவ மறையை புறக்கணிக்க மறுத்து விசுவாசத்தில் ஊன்றி நின்ற பலர் இரத்தம் சிந்தி மறைசாட்சியானார்கள். ஒரு சிலர் துன்பத்திற்கு அஞ்சி சிலைகளுக்கு வணக்கம் செலுத்தினார்கள். இந்த மறைக்கலகத்தில் தான் திருத்தந்தை பபியான் 250, ஜனவரி 20 அன்று இறந்தார். பபியானுக்குப் பிறகு, புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க விடாமல் தடுத்துவிட்டால் கிறிஸ்தவம் அழிந்து விடும் என்று கருதிய தீசியுஸ் புதிய திருத்தந்தைக்கான தேர்தலைத் தடைசெய்தான். 14 மாதங்களுக்குப் பிறகு தீசியுஸ் வெளியேறிய பின்பு சற்று அமைதி திரும்பிய நிலையில் திருத்தந்தை தேர்தல் நடைபெற்றது. பபியானுக்கு அடுத்த நிலையில் இருந்த மோசஸ் என்